உறக்கமும் விழிப்புமென
களிம்பேறிய பாத்திரங்கள்
அதங்கம் பூச மறந்த நாடகங்களில்
தரையிறங்கிய பின்பும்
மேல்நோக்கும் நோவில்
பால் வற்றிய வெற்றிடத்தின்
பசித்த படிமம்
கருணைக் கொலைக்கென
பழக்கிய கத்தி
கதவுகளற்ற பிணவறைக்குள்
மழுங்க நேரலாம்
அந்தரங்கங்களை திறவுவதற்க்கான
சாட்சி ஒப்பமாய்
நிரம்பவே நெளிகிறது
கைக்குள் ரேகைகள்
கண்துடைப்புக்கேனும்
ஒற்றை விரலை
மிச்சம் வைத்துத் தீர்ந்து போ
-புவனம்