காட்சிக்கு வெளியே

0
118

உறக்கமும் விழிப்புமென
களிம்பேறிய பாத்திரங்கள்
அதங்கம்  பூச மறந்த நாடகங்களில்

 தரையிறங்கிய பின்பும்
 மேல்நோக்கும் நோவில்
 பால் வற்றிய வெற்றிடத்தின்
பசித்த படிமம்

கருணைக் கொலைக்கென
பழக்கிய கத்தி
கதவுகளற்ற பிணவறைக்குள்
மழுங்க நேரலாம்

அந்தரங்கங்களை திறவுவதற்க்கான
சாட்சி ஒப்பமாய்
 நிரம்பவே நெளிகிறது
கைக்குள் ரேகைகள்

 கண்துடைப்புக்கேனும்
ஒற்றை விரலை
மிச்சம் வைத்துத் தீர்ந்து போ

-புவனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here