நிறமற்றதன் அடர்த்தி

0
119

என் வட்டங்களைச் சுருட்டி
சதுரச் சுவர்களில் அறைந்தவனவன்
ஆதாமுக்குரிய ஆப்பிளில்
ஒரு துளி விஷமாய் இருந்திருக்கலாம்

உடைத்தெறிந்த நிலாத் துண்டங்களோடு
உப்பு நீரில் மிதக்கத்  தொடங்கியது
எனக்கான நிறம்

கடைசி அலை
கால்களைக் கடத்துவதாய்
கண்களைக் கவ்வும் உறக்கத்தில்
அமிழ்ந்து போகும் முன்
கிளிமீனின் ஒப்பனை நிறத்தில்
ஒளிந்தவளானேன்

சதையறுந்து
செதில்கள் சிதற
தொண்டையில் முள் சிக்கியவனின்
கண்களில் நீந்துகிறது அம்மீன் 

-புவனம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here